Wednesday, August 2, 2017

மெதுத்தன்மை ....Slowness - Milan Kundera


இந்த சிறிய புத்தகத்தில் குந்தேரா பல விசயங்களைப் பற்றி பேசுகிறார். மெதுத்தன்மைக்கும் நினைவாற்றலுக்கும் உள்ள சம்பந்தம், தொழில்நுட்ப வளர்ச்சியால் வரும் இன்ப துன்பம் மற்றும் பல விசயங்களை ஆசிரியரே இந்த கதையின் கதைசொல்லியாக வந்து சொல்லுகிறார்.தொடக்கத்திலேயே ஆசிரியர் "வேகம் என்பது தொழில்நுட்பம் மனிதனுக்கு  வழங்கிய ஒரு வகையான இன்பம்" (Speed is the form of ecstasy the technical  revolution has bestowed on man) என்று கூறுவதோடு  "மெதுத்தன்மையின் மகிழ்ச்சி எங்கே சென்றது ?" என்று வாசகர்களைப் பார்த்துக் கேட்கிறார் .
The degree of slowness is directly proportional to the intensity of memory; the degree of speed is directly proportional to the intensity of forgetting.

ஆசிரியர் ஒரு நாட்டுப்புற வீட்டிற்கு செல்கிறார் .அங்கு அவர் ஒரு புத்தகத்தை  ( ''Point de Lendemain'' (''No Tomorrow''), by Vivant Denon) நினைவு கூறுகிறா ர்.கதை முன்னும் பின்னுமாக செல்கிறது . அது 200 வருடங்களுக்கு முன்னாள் அதே வீட்டில் நடந்த காதல் கதை. அதில் ஒரு குதிரை வீரன் அந்த வீட்டின்  முதலாளி அம்மாவால் தனது காதலுக்கு உபயோகப்படுத்தப்படுகிறன்.  ஆசிரியர்  தனது நண்பன் வின்சென்டை இந்நாள்  குதிரை வீரன் போல சித்தரிக்கிறார். வின்சென்டிற்கும் ஜூலிக்கும் உள்ள உறவு மிக வேகமாக ஒரே நாளில் வளர்கிறது.  குந்தேரா இந்த வேகமான காதலை விட அந்த பழைய காதலே  அது   ஒரு நாடகமாக இருந்தால் கூட சிறந்தது போல சித்தரிக்கிறார் . அதை இவ்வாறு விவரிக்கிறார்  ''Everything is composed, connected, artificial, everything is staged, nothing is straightforward, or in other words, everything is art; in this case: the art of prolonging the suspense, better yet: the art of staying as long as possible in a state of arousal.

 அது ஒரு பக்கமிருக்க மற்றொரு பக்கம் ஆசிரியர்  பிரெஞ்சு  அறிவுஜீவிகளை "dancers" என்று அழைக்கிறார்.அவர்கள் தங்கள் அரசியலுக்காக ஒழுக்க நெறிகளை பின்பற்றுபவர்கள், அவர்கள் தங்கள் வாழ்நாளில் எதையும் சாதிக்கப் போவதில்லை என்கிறார்.   புகழ் என்பது எவ்வாறு கேமராவின் கண்டுபிடிப்பால் மாறியது என்று எடுத்துக்காட்டுடன் விவரிக்கிறார்.இந்த கதையின் இறுதியில் அந்த குதிரை வீரனும் வின்செண்டும் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள் ஆனால் எதுவும் பெரிதாக நிகழவில்லை. வின்சென்ட் வேகமா அந்த சந்திப்பை கடந்து விடுகிறான் .
Because beyond their practical function, all gestures have a meaning that exceeds the intention of those who make them; when people in bathing suits fling themselves into the water, it is joy itself that shows in the gesture, notwithstanding any sadness the divers may actually feel. When someone jumps into the water fully clothed, it is another thing entirely: the only person who jumps into the water fully clothed is a person trying to drown; and a person trying to drown does not dive headfirst; he lets himself fall: thus speaks the immemorial language of gestures.” 
இதுவே குந்தேராவின் முதல் பிரெஞ்சு நாவல் ஆங்கில மொழியாக்கம் எளிய நடையில் மிகவும் நன்றாகவுள்ளது .சில இடங்களில் குழப்பமாக இருந்தாலும் கதையின் கருப்பொருள் வாசகனை முன்னே நகர்த்துகிறது .என்னை மிகவும் பாதித்து ஆசிரியரின் மெதுத்தன்மையைக் குறித்த கருத்துக்கள்தான். இந்த 'selfie' உலகில் எவருக்கும் எதையும் நின்று நிதானமாக செய்யும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது.நான் இந்த புத்தகத்தை தாய்லாந்திற்கு செல்லும் விமானத்தில் வாசித்தேன். என்னவோ தெரியவில்லை தாய்லாந்தில் சென்ற இடங்களில் எல்லாம் நிதானமாக நின்று ரசித்தேன் புகைப்படம் எடுப்பதைவிட.  என்னைப் பொறுத்தவரை  இதுவே இந்த புத்தகத்தின் வெற்றி.

வாசிக்க வேண்டிய புத்தகம். 

No comments: