Friday, August 4, 2017

அவமதிப்பு (Disgrace - J.M. Coetzee)


நிறவெறி காலத்திற்கு பிறகு  தென்னாபிரிக்காவில் நடக்கும் கதை இது.  ஒரு metaphor -கறுப்பர்கள் கையில் அதிகாரம் கிடைத்தவுடன் அவர்கள் செய்யக்கூடியவை பற்றி ஆசிரியர் இந்த கதையின் மூலம் விவரிக்கிறார். கல்லூரி பேராசிரியரான டேவிட் லூரி தனது மாணவியுடன் தகாத உறவு கொண்டதாக புகார் கூறப்படுகிறது. அவர் அதை எதிர்க்கவில்லை ஆனால் விசாரணைக் குழு சொல்வதுபோல் ஏதும் செய்யப் போவதில்லை என்று கூறி அவர்கள் அளித்த தண்டனையை ஏற்றுக்கொள்கிறார்.இது அவருடைய முதல் அவமதிப்பு .
(I)f we are going to be kind, let it be out of simple generosity, not because we fear guilt or retribution.
சிறிது காலம் தனது மகளோடு செலவிட முடிவு செய்து ஈஸ்டர்ன் கேப் (Eastern Cape) செல்கிறார். மகள் லூசி ஒரு ஓரினச்சேர்க்கையாளர் தனியாக விவசாயம் செய்து வாழ்கிறார்.நாய்கள் பலவும் அவளுக்கு உண்டு . அவருக்கு உதவியாக பெட்ரஸ் ஒரு கறுப்பர் மற்றும் அவரது குடும்பம்.லூரிக்கு இந்த அமைப்பே முதலிலிருந்து பிடிக்கவில்லை. லூஸிதான் அவரை சமாதானம் செய்கிறாள். லூரி மற்றும் பெட்ரஸின் முதல் சந்திப்பு முக்கியமானது. பெட்ராஸ் தன்னை நாய் மனிதன் (dog-man ) என்று அறிமுகப்படுத்துகிறான் . இங்கு பெட்ராஸ் சொல்வதையெல்லாம் கேட்கிறார்.வரலாறு மெதுவாக திரும்புகிறது ஒரு வெள்ளையர் கறுப்பர் சொல்வதைக்  கேட்டு வேலை செய்வது.
Temperament is fixed, set. The skull, followed by the temperament: the two hardest parts of the body. Follow your temperament. It is not a philosophy, It is a rule, like the Rule of St Benedict.
பெட்ரஸ் அங்கு வேலை செய்தாலும் அவன் மெதுவாக லூசியின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்கிறான் . புது வீடு காட்டுகிறான். லூரிக்கு அவன்மேல் ஒரு புரியாத பயம் அதை லூசியிடமும் சொல்கிறான். அவள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு நாள் லூசி லூரியின் கண்முன்னே மூன்று கறுப்பர்களால் கற்பழிக்க படுகிறாள் .லூரியை அடித்து குளியலறையில் போட்டு விட்டு அனைத்து வன்முறையும் நிகழ்த்தப்படுகிறது.அவன் கதவின் ஓரமாக தனது மகளை பரிதாபமாக பார்க்கிறான்.   இந்த நிகழ்வில் முக்கியமான ஒன்று தந்தைக்கும் மகளுக்கும் நடக்கும் உரையாடல்
              Lucy :‘But why did they hate me so? I had never set eyes on them.’ 
              Lurie:‘It was history speaking through them'
இந்த உரையாடலே கதையின் ஜீவன்.இது ஒரு தனிப்பட்ட தாக்குதல் அல்ல. அந்த மூவரில் ஒருவன் பெட்ரஸ் உறவினன். அதை அறிந்து லூரி பெட்ரஸிடம் முறையிடுகிறான். ஆனால்  பெட்ரஸ் தனக்கு ஏதும் தெரியாது என்று மறுக்கிறான். லூஸியோ போலீஸிடம் புகார் செய்ய மறுக்கிறாள். ஆசிரியர் இந்த தருணத்தை இவ்வாறு விவரிக்கிறார் -
How humiliating,’ he says finally. ‘Such high hopes, and to end like this.’
‘Yes, I agree, it is humiliating. But perhaps that is a good point to start from again. Perhaps that is what I must learn to accept. To start at ground level. With nothing…No cards, no weapons, no property, no rights, no dignity.’
‘Like a dog.’
‘Yes, like a dog.’ 
இப்படித்தான் கறுப்பர்களை வெள்ளையர்கள் பல காலமாக வைத்திருந்தனர். இப்போது அது வெள்ளையர்களுக்கு நடக்கிறது. இந்த மாற்றத்தை ஆசிரியர் மிக அழகாக பெட்ரஸ் மற்றும் லூரியின்  'role reversal' மூலம் சொல்கிறார். "டாக் மேனகா (dog man) இருந்த பெட்ராஸ் லூசியின் அனைத்து நாய்களும் கொல்லப்பட்டவுடன் 'free man" ஆகிறான் லூரியோ தன்னார்வத்தில் நாய்கள் உறைவிடத்தில் வேலை செய்கிறான். அங்கு அவன் யாருமற்ற நாய்களை வலியில்லாமல் கொல்லும் மருத்துவருக்கு உதவுகிறான்.இந்த மருத்துவமனையில் மிகவும் காயப்பட்ட நாய்களை கவனித்துக் கொள்கிறான். அவைகளின் வலியை புரிந்து கொள்கிறான். தான் லூசிக்கு ஏதும் செய்ய இயலாது அவள் தனித்து செயல்படுவது சரிதான் என்று புரிந்து கொள்கிறான். தான் மிகவும் நேசித்த நாயின் வலியைப்போக்க அதை மருத்துவரிடம் ஊசிபோட்டு கொல்லக் கொடுப்பதுடன் கதை முடிகிறது.      

லூரி நினைத்திருந்தால் அவன் மீண்டும் கேப் டவுனிற்கே சென்றிருக்கலாம் அவனுக்கு தெரியும் அவன் அங்கு வாழ முடியாதென்று.இதுவும் ஒரு குறியீடு தான். ஆசிரியர் கதை முழுதும் விலங்குகள் வதை பற்றி பேசுகிறார். ஒரு விதத்தில் இந்த கதைக்கு அது பொருந்தும் - "Yes we eat up a lot of animals in this country…It doesn’t seem to do us much good. I’m not sure how we will justify it to them." 

இந்த கதைக்கு இந்த பெயர் சரியாக பொருந்தும்.பலரும் பலவிதத்தில் அவமதிப்புக்குள்ளாகிறார்கள் லூரிதான் மிகவும்.எழுத்துநடை நேரடியான  எளிய  நடை ஆனால் அந்த எளிய நடைக்குப் பின் பல உணர்வுபூர்வமான  கருத்துக்கள் உள்ளன. பல குறியீடுகள் நமக்கு தென்னாப்பிரிக்க வரலாறு கொஞ்சம் தெரிந்திருந்தால் அதை புரிந்துகொள்ளலாம். இந்த நாவல்  ஒரு இருண்ட நிகழ்காலத்தை பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது.

நல்ல புத்தகம்.

1 comment:

kennieangle said...

Thanks to share your useful post.