Tuesday, August 1, 2017

காதல் கலை ( The Art Of Love - Ovid)


கிறிஸ்து பிறப்பிற்கு  முன் எழுதப்பட்ட இந்த புத்தகத்தைத் படித்தவுடன் நினைத்தது   இந்நூலில் ஆசிரியர் கூறும் பெரும்பாலான கருத்துகள் இன்றும் பொருந்தும் என்றுதான். இந்த புத்தகம் பெண்கள் எவ்வாறு ஆண்களை கவருவது மற்றும் ஆண்கள் எவ்வாறு பெண்களை காதல் கொள்ள வைப்பது என்று கூறுகிறது.  இந்நூலை எழுதிய ஆசிரியர் கண்டிப்பாக நிறைய படித்தவராகத்தான் இருப்பார் .
"If you want to be loved, be lovable."
"உங்களில் யாராவது  காதல் கலை அறியாதவர்களென்றால்  , அவன் இந்த நூலை படித்து இந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்ளட்டும் " இப்படித்தான் இந்த நூல் தொடங்குகிறது. ஒரு ஆண் பெண்களிருக்கும் இடத்தில்  எப்படி பேச வேண்டும் , எப்படி மது அருந்த வேண்டும் , எப்படி காதலியின் சேவகியை நடத்த வேண்டும். அது போல பெண்களுக்கும் பல ஆலோசனைகளை ஆசிரியர் கூறுகிறார்.

ஏன் ஓவிட் இந்த நூலை எழுதினார் என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.பேரரசர் அகஸ்டஸின் திருமண சட்டத்திற்கு எதிராக எழுதப்பட்டது என்று பெரும்பாலோரால் நம்மப்படுகிறது. இந்த புத்தகம்
"The Art of Love" மற்றும் "The Cure For Love" என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த நூலிலுள்ள சில "quotes" :

Yield to the opposer, by yielding you will obtain the victory.
Love is a kind of warfare.
A field becomes exhausted by constant tillage.
Chance is always powerful. Let your hook always be cast; in the pool where you least expect it, there will be fish.
Let who does not wish to be idle fall in love.
Who is allowed to sin, sins less.
Love yields to business. If you seek a way out of love, be busy; you'll be safe then.

 படித்து ரசிக்கலாம்.

1 comment:

Unknown said...

Superb. This generation needs advice like to make them feel about opposite sex.